Skip to main content

18 ஆயிரம்போதை வில்லைகளுடன் இருவர் கைது மன்னாரில் சம்பவம் !

Dec 20, 2023 20 views Posted By : YarlSri TV
Image

18 ஆயிரம்போதை வில்லைகளுடன் இருவர் கைது மன்னாரில் சம்பவம் ! 

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.



இன்று (20) காலை மன்னாரில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது .



 மேலும் தெரிய வருவதாவது,





காவல்துறையின் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18 ஆயிரம் சட்டவிரோத போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி மற்றும் தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.



மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக

அதுமாத்திரமன்றி, கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி சுமார் 21 லட்சம் ரூபா எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் பொதிகள் சேவை வாயிலாக போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை