பாடசாலை மாணவி ஒருவரை காதலித்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இராணுவ சிப்பாய்!
Dec 20, 2023 17 views Posted By : YarlSri TV
பாடசாலை மாணவி ஒருவரை காதலித்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இராணுவ சிப்பாய்!
புத்தளம் - ஆனமடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை காதலித்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இராணுவ சிப்பாய் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் குருவிட்ட இராணுவ முகாமில் கடமையாற்றும் 19 வயதுடைய இராணுவ சிப்பாய் என தெரிய வந்துள்ளது.இவர் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பிலிருந்துள்ளனர்.
சந்திக்க வருமாறு மாணவியை அழைத்த குறித்த இராணுவ சிப்பாய் ஆள் நடமாட்டமில்லாத வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய் ஆணமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago