Skip to main content

பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்! எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்கள்.

Dec 17, 2023 22 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்! எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்கள்.  

தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



 நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்கள் 



பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் அல்லது வண்ண பென்சில் குச்சிகளில் பூசப்பட்ட மை தரமற்றதாக காணப்படுவதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.



ஈயம் போன்ற கன உலோகங்கள் வாய்வழி உட்கொள்ளல் மூலம் உடலுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



சர்வதேச தரத்தின்படி, குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 19 கனரக உலோகங்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும் EN71-3 என சான்றிதழ் பெற்றுள்ளன.



இதற்கிடையில், குழந்தைகள் உணவின் மூலம் நேரடியாக உடலுடன் தொடர்பு கொள்ளும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவு பெட்டிகள் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றிர்கள் .



சந்தையில் இருந்து கொள்வனவு செய்யும் போது உபகரணங்களில் அடிப்பகுதியில் BPAயில் 5 என்ற எண் எழுதப்பட்டிருந்தால், அவை பயன்படுத்த ஏற்றவை என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றன


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை