வரலாற்று சிறப்புமிக்க வத்திக்கான் மோசடி!
Dec 16, 2023 20 views Posted By : YarlSri TV
வரலாற்று சிறப்புமிக்க வத்திக்கான் மோசடி!
வரலாற்று சிறப்புமிக்க வத்திக்கான் மோசடி வழக்கு விசாரணையில் கர்தினால் அஞ்சலோ பெக்கியூவிற்கு 5.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
75 வயதான அவர், நிதிக் குற்றங்களுக்காக வாடிகன் நீதிமன்றத்தால் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீர்ப்பு மூலம் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த வரலாற்று சிறப்பு மிக்க மோசடி வழக்கின் விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை கர்தினால் அஞ்சலோ பெக்கியூ மறுத்திருந்தார்.
ஒரு காலத்தில் போப் பிரான்சிஸின் முன்னாள் ஆலோசகராக இருந்த கார்டினல் அஞ்சலோ பெக்கியூ, ஒரு போப் போட்டியாளராகவும் கருதப்பட்டார்.
கர்தினால் அஞ்சலோ பெக்கியூ மீது சொத்துக்குவிப்பு, பதவி துஷ்பிரயோகம் மற்றும் பொய் சாட்சியம் அளிக்க ஒருவரை தூண்ட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றில் தண்டனை எதிர்கொள்ளும் கத்தோலிக்க திருச்சபையின் மிக மூத்த மதகுரு என்ற பெயரை கர்தினால் அஞ்சலோ பெக்கியூ பெற்றுள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago