Skip to main content

மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!

Dec 15, 2023 20 views Posted By : YarlSri TV
Image

மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு! 

நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கும்வேலையை பாஜக அரசு செய்துவருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், எழுத்தாளர் கி.ரமேஷ் எழுதிய பி.ராமமூர்த்தியின் வரலாற்று சுருக்கம் அடங்கிய புத்தகத்தை மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட பி.ராமமூர்த்தியின் மகள்கள் வைகை, பொன்னி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



தொடர்ந்து, கார்ப்பரேட் - மதவாத கூட்டணி, இந்திய அரசியலமைப்பு சட்ட ஜனநாயகம் சீர்குலைப்பு என்ற தலைப்பில் சீதாராம் யெச்சூரி பேசியதாவது: இந்தியாவை அதன் தன்மையை பாதுகாக்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வருகிறது. அண்மையில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வரும் காலங்களில் தமிழகம்கூட பிரிக்கப்படலாம். இவ்வாறு நீதித்துறை உட்பட அனைத்தின் அதிகாரத்தையும் மத்தியில் குவிக்கும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது.



இத்தகைய போக்குக்கு எதிராகதொடக்க காலத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் பி.ராமமூர்த்தி. அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தமிழகம் பல்வேறு விஷயங்களில் முன்னுதாரணமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு பாஜக எம்.பி.யைகூட வெற்றி பெறச் செய்யவில்லை என்ற பாரம்பரியம் தமிழகத்துக்கு இருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலிலும் அது தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, "நாடாளுமன்றம், சட்டப்பேரவை போன்றவற்றில் பி.ராமமூர்த்தியின் உரைகளை புத்தமாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அவற்றில் எப்படி மார்க்சிஸ்ட் குரல் கொடுத்தது என்பதற்கான ஆவணமாக அதுஇருக்கும். அதேநேரம், ஆண்டுதோறும் பி.ராமமூர்த்தி நினைவு சொற்பொழிவு நடைபெறும்" என்றார். நிகழ்ச்சியில், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

11 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

11 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

11 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

11 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

11 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

11 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை