பேருந்து கட்டணம் அதிகாரிக்கு சாத்தியம்!
Dec 14, 2023 20 views Posted By : YarlSri TV
பேருந்து கட்டணம் அதிகாரிக்கு சாத்தியம்!
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது சராசரியாக 15,700,000 ரோபாவினை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெட் வரி 18 வீதமாக அதிகரிக்கப்படுவதன் மூலம் இறக்குமதியில் போது பேருந்து ஒன்றுக்கு குறைந்தபட்சம் மேலும் 2 மில்லியன் ரூபா அதிகரிப்பு ஏற்படும் என கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிமையாளர்களினால் குறித்த விலையில் பேருந்தை கொள்வனவு செய்து பொதுமக்களை ஏற்றிச் செல்ல முடியவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உதிரிப்பாகங்களின் விலைகள், எரிபொருள் மற்றும் சேவைக்கட்டணம் என்பனவும் அதிகரிக்கும் என கெமுனு விஜேரத்ன
குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளுக்கு வெட் வரி விதிக்கப்பட்டுள்ளதால் டீசல் விலை அதிகரிக்கும் எனவும், இதன் காரணமாக மீண்டும் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago