Skip to main content

ஊர்காவற்துறையில் யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில் பூசகர் கைது.

Dec 13, 2023 26 views Posted By : YarlSri TV
Image

ஊர்காவற்துறையில் யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில் பூசகர் கைது. 

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தின் விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த பூசகர் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆலயத்தின் பூசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகம் ஏற்படாதவாறு , விக்கிரகங்களை இருப்பிடத்தில் இருந்து மாற்றி  யந்திரத்தகடுகளை  திருடி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன்  அவரால்  திருடப்பட்ட யந்திரதடுகள் சுமார் 10 பவுண் பெறுமதியானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை