Skip to main content

குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்- வருகிற 30-ம் திகதி வரை!

Dec 13, 2023 24 views Posted By : YarlSri TV
Image

குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்- வருகிற 30-ம் திகதி வரை! 

குழந்தைகளுக்கான  சிறப்பு தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.வருகின்ற 30-ம் திகதிவரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் நகர்ப்புற சுகாதார மையங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.



புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.



நடமாடும் மருத்துவ வாகனங்கள் நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 160 வாகனங்கள் இயங்கி வருகின்றன. 



இதுவரை ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்டுள்ள 7 வார முகாம்களில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இன்னும் 3 வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இவ்வாறு கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

21 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

21 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

21 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை