Skip to main content

கம்பஹாவில் கூரிய ஆயுதங்களுடன் திருட்டில் ஈடுபட்ட நபர்!

Dec 11, 2023 38 views Posted By : YarlSri TV
Image

கம்பஹாவில் கூரிய ஆயுதங்களுடன் திருட்டில் ஈடுபட்ட நபர்!  

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த கொள்ளை சம்பவமானது, அடகு வைக்கும் நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்போது, சந்தேக நபர்கள் சுமார் 175 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.



இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அத்தோடு, இக் கொள்ளை சம்பவம் அடகு வைக்கும் நிலையித்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு  கமாராக்களில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை