Skip to main content

காணி சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்!

Dec 10, 2023 24 views Posted By : YarlSri TV
Image

காணி சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்! 

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேசத்தையும், பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.



குறித்த போராட்டம் பொன்னாலை சந்தியில் இன்று காலை 9.00 மணிக்கு கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.



“எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே, எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை, ரணில் அரசே எமது கடலளசுவீகரித்தூ வரலாற்று தவறைச் செய்யாதே, மேச்சல் தரையையும் மயானங்களையும் மாட்டு வண்டி சவாரித் திடல்களையும் சுவீகரிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடப்பட்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை