நந்தவனம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!
Dec 10, 2023 26 views Posted By : YarlSri TV
நந்தவனம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி வீரராகவ பெருமாள் திருக்கோவிலில், நந்தவனம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி,டிச.9:- மரங்களின் புகழிடமாக திகழும் திருக்கோவில்களில்,இந்து சமய அறநிலையத்துறை, மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வனகாப்பு மையம் ஆகியவற்றுடன் இணைந்து, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக, நந்தவனம் அமைக்கும் பணிகள்,கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, இம்மாவட்டத்தில், பாப்பாக்குடி திருக்கடிகை முன்றீஸ்வரர் திருக்கோவில், பள்ளக்கால் பெருமாள் கோவில், கோடக நல்லூர் அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில், ஏர்வாடி சிவன் கோவில், வீரவநல்லூர் பூமிநாதர் திருக்கோவில் ஆகிய 5 திருக்கோவில்களில், நந்தவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று [டிசம்பர்.9] ஆறாவதாக, ஏர்வாடி வீரராகவ பெருமாள் திருக்கோவிலில் நந்த வனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நந்தவனத்தில், ஆனைக்குன்றுமணி, உலக்கைப்பாலை, புரசு, காட்டுப்புரசு, மந்தாரை, சிவ குண்டலம், சரக்கொன்றை, காட்டுநெல்லி உள்ளிட்ட, மொத்தம் 40 வகையான "மரக்கன்றுகள்" நடப்பட்டுள்ளன. "நம்ம ஊரு நந்தவனம்" என்னும் திட்டத்தின் கீழ், 112 இனங்களைச் சார்ந்த, 650 மரக்கன்றுகள், இது வரையிலும், இம்மாவட்டத்தில் நடப்பட்டுள்ளன. "எல்லா திருக்கோவில்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்!"- என, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் இ.கா.ப. இன்றைய நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், நாங்குநேரி வட்டாட்சியர் விஜய் ஆனந்த், ஏர்வாடி பேரூராட்சி தலைவி தஸ்லீமா அய்யூப்கான், செயல் அலுவலர் சார்ஜன் மேத்யூ, வீரபெருமாள் கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட பலர், கலந்து கொண்டனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
24 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
24 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
24 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
24 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
24 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
24 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago