அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வெப்ப நிலை!
Dec 09, 2023 21 views Posted By : YarlSri TV
அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வெப்ப நிலை!
அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெப்ப அலையால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உண்டு என்பதால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல இடங்களில் நெருப்பு மூட்டுவதற்கு அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.
சிட்னியில் டிசம்பர் மாதம் சராசரியாகப் பதிவாகும் வெப்ப நிலையைக் காட்டிலும் 15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. அதாவது அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரலாம் என்று அவுஸ்திரேலிய வானிலை மையம் கூறுகின்றது.
“நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வதுடன் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் நேரம் இது,” என்று பிரதமர் அந்தோணி அல்பெனிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான கோடைக்காலத்தில் ஏற்கெனவே காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுவரும் வெப்ப அலையால் அந்த அபாயம் உச்சத்தை எட்டியுள்ளது..
இந்நிலையில், நியூ சவுத் வேல்சில் 71 காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றில் 21ஐ இன்னமும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றும் மாநிலத்தின் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
அடுத்த வாரம் வரை இந்தக் கடுமையான வெப்ப அலை நிலவரம் நீடிக்கலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சிலர் இந்த வெப்ப தாக்கங்களில் இருந்து தவிர்த்துக்கொள்ள கடற்கரைக்குப் படையெடுத்துச் செல்வதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago