நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது!
Dec 09, 2023 34 views Posted By : YarlSri TV
நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது!
நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏனைய அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சார விநியோகத்தை மீள வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று மாலை (டிசம்பர் 09) பிரதான மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் விநியோகத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபை கூறியுள்ளது.
மின்சார சபையை தனியார்மயப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகின்றன.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல எம்.பிகள் மின்சார சபையை தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 13 மணிநேர மின்வெட்டை இலங்கை மக்கள் எதிர்கொண்டனர்.
அந்நிய செலாவணி பற்றாக்குறையின் காரணமாக எரிபொருள் ஏற்றுமதியை உரிய காலப்பகுதியில் மேற்கொள்ள நிதியை செலுத்த இலங்கை தவறியதால் அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago