Skip to main content

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்!

Dec 09, 2023 25 views Posted By : YarlSri TV
Image

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்! 

அடுத்து ஆண்டு ஜனாதிபதி தேர்தல், அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகத தமிழர் பேரவை பிரதிநிதிகளிடம் அறிவித்துள்ளார்.



தேர்தல் முடிவடைந்த பின்னர அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (07) சந்தித்தனர்.



இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,



“அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதுடன் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலையும் அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவதே எனது யோசனை.



தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.



பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டிருந்தனர்.



ஆனால், பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்தாகவும், வடக்கு கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை