Skip to main content

மூன்றாவது கப்பலுக்கு அனுமதி கோரும் சீனா!

Dec 09, 2023 27 views Posted By : YarlSri TV
Image

மூன்றாவது கப்பலுக்கு அனுமதி கோரும் சீனா! 

நாட்டின் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை தேடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.



இலங்கை கடற்பரப்பில் சீன ஆய்வு கப்பலை நிறுத்துவதற்கும் ஆய்வுகளை நடவத்துவதற்கும் அனுமதி வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட புவிசார் அரசியல் கவலைகள் மற்றும் கேள்விகளைத் தொடர்ந்து இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



கடந்த 14 மாதங்களுக்கு இரண்டு ஆய்வு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளன.



இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மற்றுமொரு ஆய்வு கப்பலுக்கான அனுமதியை சீனா இலங்கையிடம் கோரியுள்ளது.



இதனிடையே, உளவுபார்க்கும் சாத்தியக்கூறுகளை மேற்கோள் காட்டி முந்தைய இரண்டு ஆய்வு கப்பல்கள் குறித்தும் இந்தியா கவலை வெளியிட்டிருந்தது.



அத்துடன், கொழும்பு துறைமுகத்தை அதன் முக்கிய இடமாற்ற மையமாக இந்தியா பயன்படுத்தி வருகிறது.



இந்த நிலையில், மூன்றாவது கப்பலுக்கு இலங்கை இதுவரை அனுமதி வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை