கிழக்கு ஆபிரிக்க படை கொங்கோவில் இருந்து வெளியேற்றம்!
Dec 06, 2023 37 views Posted By : YarlSri TV
கிழக்கு ஆபிரிக்க படை கொங்கோவில் இருந்து வெளியேற்றம்!
கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையானது கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளது.
கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படை தொடர்ந்து கொங்கோவில் இருப்பது பயனற்றது என Kinshasa கருதிய நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
M23 கிளர்ச்சிக் குழுவின் மீள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதன்முதலில் கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையினர் நிறுத்தப்பட்டனர்.
அத்துடன், கிளர்ச்சியாளர்களினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை விடுவிப்பதற்கு கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையினர் அழைக்கப்பட்டனர்.
கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையினர் அழைக்கப்பட்டதில் இருந்து M23 கிளர்ச்சிக் குழுவை மீளப்பெறாத தவறியுள்ளதாக கொங்கோ ஜனாதிபதி Felix Tshisekedi விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
தொடர்ந்து கிழக்கு ஆபிரிக்க சமூக உச்சிமாநாட்டிற்குப் பின்னர் குறித்த ஆணையை புதுப்பிக்கப் போவதில்லை என கொங்கோ ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படை மற்றும் கொங்கோ அரசாங்கத்துக்கு இடையிலான ஒப்பந்தம் கடந்த 8 ஆம் திகதியுடன் காலாவதியான நிலையில், படையினர் வெளியேறி வருகின்றனர்.
கொன்கோவின் Goma நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இரண்டு விமானங்கள் ஊடாக படையினர் வெளியேறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago