Skip to main content

பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட விவகாரம்!...

Nov 26, 2023 21 views Posted By : YarlSri TV
Image

பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட விவகாரம்!... 

கடந்த 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் ரூ. 42,750 கோடி மதிப்பில் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சாலை மார்க்கமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார்.



அப்போது, விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். இதனால், பிரதமரின் கான்வாய், மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்டது.



இதற்கு, அன்றைய சரண்ஜித் சிங் சன்னி அரசை குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், பிரதமரின் பயணத் திட்டங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகக் காங்கிரஸ் அரசு பச்சைப் பொய் கூறியது.



இதனால், பிரதமர் மோடியின் பாதுகாப்பு விதிமீறல் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, பாதுகாப்பு மீறலுக்கு மாநில காவல்துறை அதிகாரிகளே காரணம் என்று உறுதிபடத் தெரிவித்தது.



இதனையடுத்து, பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, குற்றம் சாட்டப்பட்ட 7 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.



ஃபெரோஸ்பூர் காவல்துறைத் தலைவர் குர்பிந்தர் சிங், டிஎஸ்பி-க்கள் பார்சன் சிங் மற்றும் ஜகதீஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜதீந்தர் சிங் மற்றும் பல்விந்தர் சிங், சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோர் முதற்கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



இவர்கள் அனைவரும் பஞ்சாப் சிவில் சர்வீஸ் விதிகள் 1970, பிரிவு 8 -ன் கீழ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் கடும் குற்றம் செய்துள்ளதால், பணியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை