கிரிக்கெட் சபை குழப்பத்தின் பின்னணியில் இந்தியா
Nov 10, 2023 36 views Posted By : YarlSri TV
கிரிக்கெட் சபை குழப்பத்தின் பின்னணியில் இந்தியா
இலங்கை கிரிக்கெட் சபையில் காணப்படும் குழப்பங்களின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவன, அதிகாரசபையின் தலைவர், நிர்வாகசபை தலைவர் உட்பட்ட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பு ஒன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே இலங்கை கிரிக்கெட் சபையினது குழப்பங்களுக்குப் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும், கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்காக மட்டும் தனியான வலயம் ஒன்று உள்ளதாக தெரிவித்த அவர், இலங்கை வீரர் ஒருவர் கூட அந்த பிராந்தியத்திற்குள் நுழைய முடியாது எனவும் இந்த உண்மை பலருக்கும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
20 ஓவர் உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்தார்.
-
மரியூபோலிலிருந்து வெளியேறிய பெண்களை உள்ளாடைகளை சோதித்து அவமானப்படுத்திய ரஷ்யப் படைவீரர்கள்: கொந்தளிக்க வைக்கும் தகவல்கள்
-
வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago