’மௌனிகள் கொதிக்கின்றனர்’
Nov 10, 2023 43 views Posted By : YarlSri TV
’மௌனிகள் கொதிக்கின்றனர்’
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதிபதி ஒருவரை நான் குற்றம்சுமத்திய போது நீதிபதிகள் பற்றி பேச முடியாதென கொதித்தெழுந்த இந்த சபையிலுள்ள எம்.பி.க்கள், கிரிக்கெட் சபை மோசடி தொடர்பில் நீதியரசர்களை பெயர் குறிப்பிட்டு குற்றம்சாட்டும்போது மட்டும் மௌனம் காப்பது ஏன்? என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரசபையின் தலைவர் உட்பட நிர்வாகசபை தலைவர் உட்பட நிர்வாக சபைையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
தற்போது மோசடியாளரென குற்றம்சாட்டப்படும் சம்மியை கிரிக்கெட் சபைத்தலைவராக நியமிக்கும் போது விளையாட்டுத்ததுறை அமைச்சராக இருந்தவர் நாமல் ராஜபக்ஸ.எனவே கிரிக்கெட் சபை மோசடிக்கு முன்னாள் அமைச்சர்களிலிருந்து மாவட்ட அதிகாரிகள் வரை பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர்கூட எல்லாம் முடிந்த பின்னர்தான் விடயங்களை வெளிப்படுத்துகின்றார் என்றார்.
ஒரு பிரச்சினையை மூடி மறைக்க இன்னொரு பிரச்சினையை கிளப்புவது வழமை. தற்போது வற் வரி அதிகரிக்கப்பட்டு அதற்கு மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளது.வரவு -செலவுத்திட்டத்தின் பின்னர் இதனைவிட மிகப்பெரிய பல பிரச்சினைகள் வரவுள்ளன. போராட்டங்கள் வலுப்பெறவுள்ளன. மருத்துவர்கள் தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். இந் நிலையில நாட்டு மக்களை திசை திருப்ப கிரிக்கட் சபை மோசடி பெரிதுபடுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த கிரிக்கட் சபை மோசடி தொடர்பான விவாதத்தை பார்த்து மக்கள் ஏமாந்து விடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.
இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் எனக்கு எதிராக , என்னை பெரிய வில்லனாக்க,இனவாதியாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரை என்னால் கட்டுப்படுத்த முடியுமா?நான் என்ன இராணுவத்தளபதியா?பொலிஸாரைக் கட்டுப்படுத்த நான் என்ன பொலிஸ்மா அதிபரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago