Skip to main content

இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை மக்களே அவதானம்!

Nov 09, 2023 26 views Posted By : YarlSri TV
Image

இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை மக்களே அவதானம்! 

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில்  இன்று பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்  என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 



அதேவேளை, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் 



வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் எனவும் 



மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான கால  நிலை எதிர்பார்க்கப்படலாம்.



இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை