Skip to main content

ஓர் இனம் அழிக்கப்படுவதை பாற்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலை தமிழர்களுக்கு இல்லை..

Nov 08, 2023 34 views Posted By : YarlSri TV
Image

ஓர் இனம் அழிக்கப்படுவதை பாற்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலை தமிழர்களுக்கு இல்லை.. 

ஹாசா போன்று இலங்கையின் வடக்கும் கிழக்கும் சுடுகாடாக மாற வேண்டுமென பேரினவாதம் விரும்புகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.



பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



மேலும் தெரிவிக்கையில்,



ஹாசா சுடுகாடாக மாறி வருகிறது. இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக வைத்துக் கொள்ளவே பேரினவாதம் விரும்புகிறது. 



தமிழர்களாக எங்களால்  மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏன் எனில் அதன் வலியும் வேதனையும் எங்களுக்குத் தெரியும்.



 2009 ஆம் ஆண்டும் அதற்கு முந்திய காலங்களிலும் எம் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 

வைத்தியசாலைகள், மத வழிபாட்டிடங்கள்,  சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் அகதி முகாம்கள் என குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளை கொன்றார்கள்.



ஓர் இனம் அழிவதனை பால்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலையில் எம் தமிழர் இனம் என்றும் இருக்காது. 



எந்த மக்களுக்கு எங்கு அநியாயம் நடந்தாலும்  அங்கு எமது மக்களின் குரலும் எனது குரல் ஒலிக்கும்.



 கொல்லப்படுபவர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தும் இலங்கை  மக்கள் எமது நாட்டில் கொல்லப்படவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராட வேண்டும் என்றும் சாணக்கியன் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை