அம்பிட்டிய தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா? இல்லையா? - சாணக்கியன்
Nov 07, 2023 18 views Posted By : YarlSri TV
அம்பிட்டிய தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா? இல்லையா? - சாணக்கியன்
தமிழ் மக்கள் துண்டு துண்டாக வெட்டுவேன் என அச்சுறுத்திய மட்டக்களப்பு - மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இருக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் எனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதோடு, என்னையும் எனது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்டளையை பொலிசார் நடைமுறைப்படுத்தவில்லை என கூறியிருந்தேன்.
இதனை தேரர் வேறு வகையில் திரிபுப்படுத்தி நான் நாடாளுமன்றத்தில் பேசும் போது என்னை தடுக்க அங்கு முதுகெலும்புள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லையா என்று எனது சிறப்புரிமையை மீறும் வகையில் ஒரு காணொளியினை வெளியிட்டுள்ளார்.
மேலும் கிழக்கில் வசிக்கும் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.
இவ்வாறு என்னையும் எனது மக்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்- என்றார் .
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago