விரைவில் தகுதியான ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார்
Nov 07, 2023 17 views Posted By : YarlSri TV
விரைவில் தகுதியான ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார்
அரசியலமைப்பு பேரவை பிரேரிக்கும் நபர் ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கும் அல்லது நியமிக்காமல் விடுவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி, விரைவில் தகுதியான ஒருவர் ஜனாதிபதியால் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பும் நபர்கள் தொடர்பாக பேரவையின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு இருக்கிறது.
உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும்போது அதனை வெளிப்படைத் தன்மையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி பெயர்களை பரிந்துரை செய்கிறார்.
அரசியலமைப்பு பேரவை பிரேரிக்கும் நபரை நியமிப்பதற்கும் நியமிக்காமல் இருப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி, நாட்டை நிர்வகித்து செல்லும் ஜனாதிபதி, அவருக்கு பொருத்தமான ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுப்பார். என்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago