Skip to main content

காதலிக்க மறுப்பு தெரிவித்த யுவதிக்கு நேர்ந்த சோகம். கொழும்பில் சம்பவம்

Nov 07, 2023 21 views Posted By : YarlSri TV
Image

காதலிக்க மறுப்பு தெரிவித்த யுவதிக்கு நேர்ந்த சோகம். கொழும்பில் சம்பவம் 

காதலிக்க மறுப்பு  தெரிவித்தமையால் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சந்தேகநபரை கொழும்பு - நாரஹேன்பிட்ட பகுதியில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



நாரஹேன்பிட்ட நில அளவையாளர் அலுவலக கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



 காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



சந்தேக நபரும், காயமடைந்த யுவதியும் காலியில் இருந்து நெடுஞ்சாலை வழியாக நாரஹேன்பிட்ட பகுதிக்கு பேருந்தில் வந்துள்ளனர். என தெரிய வருகின்றது



நாரஹேன்பிட்ட கிருள வீதியில் அமைந்துள்ள நில அளவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக பேருந்தில் இருந்து இறங்குவதற்கு தயாரான போதே சந்தேகநபர்  வைத்திருந்த கத்தியால் யுவதியை தாக்கினார்



சம்பவத்தில்  தாக்குதலுக்கு உள்ளன யுவதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாரஹேன்பிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை