மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு!...
Nov 05, 2023 30 views Posted By : YarlSri TV
மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு!...
மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, மிசோராம் மாநிலத்தில் வரும் 7-ம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் 17-ம் தேதியும், ராஜஸ்தானில் 25-ம் தேதியும், தெலங்கானாவில் 30-ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. அதேசமயம், சத்தீஸ்கரில் 7 மற்றும் 17-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடக்கிறது.
மேற்கண்ட 5 மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைத் தவிர குறிப்பிடத்தக்கத் தலைவர்கள் இல்லை.
அதேசமயம், பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் என முக்கியப் பிரச்சாரகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் வாக்குசேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மிசோராம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை மறுநாள் (7-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுவதால், இவ்விரு மாநிலங்களிலும் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago