Skip to main content

டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை வந்த தந்தை, மகனை நாடு கடத்த நடவடிக்கை

Apr 07, 2023 61 views Posted By : YarlSri TV
Image

டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை வந்த தந்தை, மகனை நாடு கடத்த நடவடிக்கை 

ஐரோப்பாவுக்குத்  தப்பிச் செல்லும் நோக்கில் போலியான டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈராக் இளைஞர் ஒருவரையும் அவரது தந்தையையும் நாடு கடத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



18 வயதான ஈராக் இளைஞர் தனது தந்தையுடன் துபாயிலிருந்து இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.



இலங்கைக்குள் பிரவேசிப்பதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள குடிவரவுத் திணைக்கள கரும பீடத்தில் டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை வழங்கியுள்ளார்.



இதன்போதே குறித்த கடவுச்சீட்டு போலியானது என்பது தெரிய வந்ததால் அவர்கள் இருவரையும் நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டது.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

23 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

23 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

23 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை