Skip to main content

கையை வெட்டி எடுத்துச் சென்ற நபர் தொடர்பில் வெளியான செய்தி

Mar 24, 2023 63 views Posted By : YarlSri TV
Image

கையை வெட்டி எடுத்துச் சென்ற நபர் தொடர்பில் வெளியான செய்தி 

கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது கையை துண்டாக்கி அதனை எடுத்துச் சென்றிருந்த சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.



சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.



தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் குறித்த நபரின் கையை வெட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரின் கைகள் மணிக்கட்டு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்ததோடு, அதனை அவர் கொண்டுச்சென்றிருந்தார்.



இந்த தாக்குதலில் காயமடைந்தவர் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடையவராவார்.



சந்தேகநபர் இதற்கு முன்னரும் ஒருவரின் கையை வெட்டியிருந்ததோடு, அவரது கையை வைத்தியர்கள் ஒன்றுசேர்த்திருந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறு வெட்டப்பட்ட கையை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை