Skip to main content

பரீட்சைகள் பிற்போடப்பட்டன....

Mar 14, 2023 91 views Posted By : YarlSri TV
Image

பரீட்சைகள் பிற்போடப்பட்டன.... 

நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்போடுமாறு மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேல்மாகாண பாடசாலைகளின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



இதன்படி, தரம் 09 தவணைப் பரீட்சைகள் மார்ச் 21 ஆம் திகதிக்கும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகள் மார்ச் 22 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புகளை நடத்துவதற்கும், அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் எதிராக நாளை நடைபெறவுள்ள கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, தரம் 06 தொடக்கம் 09 வரையான காலப் பரீட்சைகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) வரையும், தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் மார்ச் 22 ஆம் திகதியும் பிற்போடப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை