டொலரின் பெறுமதி குறைந்தாலும் திடீரென அதிகரித்தது தங்கத்தின் விலை
Mar 10, 2023 65 views Posted By : YarlSri TV
டொலரின் பெறுமதி குறைந்தாலும் திடீரென அதிகரித்தது தங்கத்தின் விலை
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொ்ர்ந்து வலுவடைந்து வந்தது. இன்றைய தினமும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும் விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகி வந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 40,000 வரை குறைந்திருந்தது.
கடந்த காலங்களில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 180,000க்கும் மேல் இருந்தது. எனினும் நேற்றைய தினம் சுமார் 133,000 வரை விலை குறைவடைந்திருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டொலரின் விலை குறைவடையும் இவ்வோளையிலும், தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கையில்,
தங்கத்தின் விலை திடீரென பாரியளவில் குறைந்து வருவதால் தங்கத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
சந்தையில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதாலேயே இன்று தங்கத்தின் விலை அதிகரித்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago