விடுதலைப் புலிகளு் அமைப்பை தடை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி மனு!
Mar 09, 2023 59 views Posted By : YarlSri TV
விடுதலைப் புலிகளு் அமைப்பை தடை பட்டியலிலிருந்து நீக்கக் கோரி மனு!
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளை அமைப்பை நீக்கவேண்டும் என்று கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி ருத்ரகுமாரன், இந்திய உள்துறை அமைச்சுக்கு இது தொடர்பிலான விண்ணப்ப கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இதில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஏன் இந்தியாவின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்பதற்கான நியாயங்கள் கூறப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு முதல் இந்த கோரிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்து வருவதாக ருத்ரகுமாரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைக் காரணமாக, இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பணியாற்றுவதில் சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்த விண்ணப்பக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நிபுணரின் அறிவிப்புகளின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப்புலிகள் தற்போது எந்தவொரு நிறுவன கட்டமைப்பான அமைப்பையும், எந்தவொரு நிறுவன கட்டமைப்பையும் கொண்டிருக்கவில்லை என்பது இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கான காரணமாக, பிராந்தியத்திற்கும் இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கும் அச்சுறுத்தல் என்ற விடயத்தை இந்தியா, வலியுறுத்தி வருகின்றபோதும், அதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமது மனுவில் மறுத்துள்ளது.
இந்தநிலையில் தமிழ்மக்களின் அபிலாசைகளை முன்னெடுக்க இந்தியாவின் ராஜதந்திர உதவி அவசியம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கை, இந்திய மக்களின் ஒருமைப்பாட்டையும், பிராந்திய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.
அத்துடன் தமிழீழம் இந்தியாவுடன் சிறப்பான உறவை கொண்டிருக்கும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago