Skip to main content

பொலிஸ் அதிகாரிகளுடன் முட்டிய ஊர் மக்கள்! இறுதியில் நடந்த சோகம்...

Mar 06, 2023 89 views Posted By : YarlSri TV
Image

பொலிஸ் அதிகாரிகளுடன் முட்டிய ஊர் மக்கள்! இறுதியில் நடந்த சோகம்... 

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.



அந்தப் பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொள்ள பொலிஸார் முயன்றபோது பிரதேச மக்கள் தடுத்துள்ளனர்.



இதன்போது இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இதையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 



மேலும் குறித்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை