Skip to main content

பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி திடீர் மரணம்

Mar 01, 2023 76 views Posted By : YarlSri TV
Image

பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி திடீர் மரணம் 

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர் அளவுக்கு அதிகமாக போதைமாத்திரைகளை உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.



குறித்த மாணவி நேற்று (28) பல்கலைக்கழக விடுதியில் உள்ள அறைக்குள் சுகவீனமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.



உடனடியாக அவரை மீட்ட நண்பர்கள் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.



எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி இன்று அதிகாலை  உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



மேலும் அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை