100க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள் கதிகலங்கிய உக்ரைனிய நகரங்கள்!
Dec 30, 2022 117 views Posted By : YarlSri TV
100க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள் கதிகலங்கிய உக்ரைனிய நகரங்கள்!
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள் இன்று தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 மாதங்கள் கடந்து மந்த நிலையை அடைந்துள்ள உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், யாரும் எதிர்பாராத நேரம் ரஷ்ய ராணுவம் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று ரஷ்ய ராணுவம் 120க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனிய நகரங்கள் மீது ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனுக்குள் நுழைந்த பெரும்பாலான ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தள்ளனர்.
பாதிப்புக்கள்
உக்ரைனிய ஜனாதிபதியின் அலுவலக ஆலோசகர் Oleksiy Arestovych முகபுத்தகத்தில் எழுதியுள்ள குறிப்பில், 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பல அலைகளில் உக்ரைனுக்குள் வருகின்றன,மேலும் நாடு முழுவதும் வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகள் கேட்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு சாத்தியமான சேதத்தை குறைக்கும் நோக்கில் ஒடெசா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் நிருபர் மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.
இதேவேளை ரஷ்யாவின் இன்றைய ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago