Skip to main content

இனபிரச்சினையை ரணில் தீர்த்துவைப்பாரா..! ஆனந்தசங்கரி

Dec 27, 2022 98 views Posted By : YarlSri TV
Image

இனபிரச்சினையை ரணில் தீர்த்துவைப்பாரா..! ஆனந்தசங்கரி 

75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்து வைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.



இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,



அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.



சட்டவிரோதமாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த சம்பந்தன்



அன்று நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும்,ரணில் விக்ரமசிங்க சமஷ்டியையும் முன்வைத்தனர். அவ்வாறாக போர் நிலவிய நேரத்தில் சம்பந்தனும் திருட்டு தனமாக நாடாளுமன்றம் சென்ற 22 பேரும் மக்களிடம் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு பிரசாரம் செய்தனர்.



இதனால் ரணில் தோற்றார். அவர்களை நம்பி மக்களும் வாக்களித்தனர்.சமஷ்டியை செல்லா காசாக்கினார்கள். அன்று சமஷ்டி வேண்டாம் என்று பிரசாரம் செய்த அரசியல் தலைவர்கள், இன்று நானா நீயா என்று போட்டி போடுகிறார்கள்.



2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலை புலிகளையும் உள்ளடக்கியதாக அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்று உதய சூரியன் கொடி கேட்டு கொண்டது. ஆனால் சம்பந்தன் பிரபாகரனை ஒரு பக்கமாகவும் தானும் சேனாதிராஜாவும் தமிழ்ச்செல்வனோடும் இணைந்தனர்.



எம் இனத்தை காட்டிக்கொடுத்த சம்பந்தன் 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக நாடாளுமன்றத்துக்கு சென்றவர், நாடாளுமன்றில் இருக்க தகுதி அற்றவர். இந்த பிரச்சினை பற்றிய கதைகளை நிறுத்துங்கள் கதைத்து ஒன்றும் ஆகபோவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை