Skip to main content

கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வு..!

Oct 25, 2022 102 views Posted By : YarlSri TV
Image

கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வு..! 

நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது. 



உயர்த்தப்பட்டுள்ள வரி



இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



கசீனோ சூதாட்ட நிலையங்களை நடத்திச் செல்வதற்காக இதுவரை காலமும் 200 மில்லியன் ரூபா வரி அறவீடு செய்யப்பட்டது.



இந்த தொகையானது 500 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.



சூதாட்ட நிலையங்களின் வருடாந்த வரியும் 600,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.



மதுபானம் மற்றும் சிகரெட்டுக்கான வரி



மேலும் ஒரு போத்தல் மதுபானத்திற்கான வரி 75 வீதமாக உயர்த்தப்படும் எனவும், சிகரெட் வரி 85 வீதமாக உயர்த்தப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை