Skip to main content

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம்:சஜித் பிரேமதாச தெரிவிப்பு

Sep 06, 2023 38 views Posted By : YarlSri TV
Image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம்:சஜித் பிரேமதாச தெரிவிப்பு 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் தான் பெரும்பான்மையானவர்கள் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர் என நேற்று (05.09.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.



இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய அந்நாட்டு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கு வருந்துவதாகவும், இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது.இது குறித்து சர்வதேச விசாரணை தேவை.



கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை அந்நேரத்தில் தனக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னதற்கு தாம் வருத்தப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம்.அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருக்கின்றது.



கர்தினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல், இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணையை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.



ஆட்சிக்கு வருவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயன்படுத்தப்பட்டது என்றும் சபாநாயகர் உட்பட மொட்டு சின்னத்தின் அனைவரும் அப்போது தேர்தல் மேடைகளில் இதையே பேசினார்கள்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை