Skip to main content

ஜனாதிபதி மாளிகையில் பியானோ இசைத்து வேலை இழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்

Sep 03, 2023 34 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதி மாளிகையில் பியானோ இசைத்து வேலை இழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 

கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் போது, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர், எதிர்ப்பாளர்களை பியானோ இசைத்து இந்த அதிகார மகிழ்வித்துள்ளார்.



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த எதிர்ப்பாளர்களால், ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட நாளில் பாதுகாப்பிற்காக கான்ஸ்டபிள் தயாரத்ன நியமிக்கப்பட்டார்.



இதன்போது ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருந்த பியானோவில் அமர்ந்து, அதன் அறைகள் வழியாக சென்றுகொண்டிருந்த மக்களுக்கு பாடலை இசைத்திருந்தார்.



இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் நீண்ட  விசாரணைகளுக்குப் பிறகு, குறித்த அதிகாரி ஒழுக்கத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின்  கீழ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை