‘பரம்பொருள்’ திரைப்படம் தொடர்பான சுவாரசியமான தகவலைத் தெரிவித்த சரத்குமார் தகவல்
Aug 24, 2023 53 views Posted By : YarlSri TV
‘பரம்பொருள்’ திரைப்படம் தொடர்பான சுவாரசியமான தகவலைத் தெரிவித்த சரத்குமார் தகவல்
கவி கிரியேஷன்ஸ் சார்பில் மனோஜ், கிரிஷ் தயாரித்துள்ள படம், ‘பரம்பொருள்’. இயக்குனர் ராம் உதவியாளர் சி.அரவிந்த் ராஜ் இயக்கியுள்ளார். சரத்குமார், அமிதாஷ், காஷ்மீரா பர்தேசி, பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி.சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லத்துரை நடித்துள்ளனர். ‘ரிச்சி’ பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை, சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். படம் குறித்து சரத்குமார் கூறியதாவது: இக்கதையை இயக்குனர் என்னிடம் சொன்னவுடன் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். பழங்காலச் சிலைகள் கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், முதலில் சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டு, பிறகு தயாரிப்பாளர்களின் ஆதரவால் பெரிய பட்ஜெட்டுக்கு மாறியது.
நாங்கள் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக வந்துள்ளது. தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டிய தொழில்நுட்பங்களுடன், அனைவரும் கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கியுள்ளோம். ‘போர் தொழில்’ படத்தின் ஜானருக்கும், இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். சிலை கடத்தலை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். எனக்கும், அமிதாஷுக்குமான மோதல் ஒவ்வொரு காட்சிக்கும் மாறிக்கொண்டே இருக்கும். ‘பரம்பொருள்’ 2ம் பாகத்துக்காக லீட் கிளைமாக்ஸில் இடம்பெற்றுள்ளது. அதுபற்றி இயக்குனர் முடிவு செய்வார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago