காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு அடுத்த ஆறுமாதங்களில் நீதி வழங்க நடவடிக்கை.
Aug 24, 2023 42 views Posted By : YarlSri TV
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு அடுத்த ஆறுமாதங்களில் நீதி வழங்க நடவடிக்கை.
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு அடுத்த ஆறுமாதங்களில் நீதிவழங்கப்படும்என காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்களை தேடும் பொறிமுறையை துரிதப்படுத்தியுள்ளதாகவும் இந்த செயற்பாடுகள் வெளிப்படையாக இடம்பெறுவதாகவும் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகின் வேறு எந்த நாட்டையும் விட இலங்கையில் குறிப்பிட்ட செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல்போன தனிநபர்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணையின் முதற்கட்டத்தினை டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் முதற்கட்ட விசாரணைகள் பூர்த்தியானதும் காணாமல்போனவர்கள் சான்றிதழ் அல்லது மரணச்சான்றிதழை பெற விரும்பும் குடும்பத்தவர்களுக்கு அது கையளிக்கப்படும் எனவும் காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago