3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலாளி கைது!
Aug 23, 2023 52 views Posted By : YarlSri TV
3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலாளி கைது!
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் தனியார் குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சேலத்தை சேர்ந்த ஜலீல் பாஷா (வயது 42) குழந்தையிடம் பேச்சு கொடுப்பது போல் தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஜலீல் பாஷாவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குழந்தையிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜலீல் பஷாவை கைது செய்தனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago