Skip to main content

குழந்தையுடன் குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட தாய்!

Aug 23, 2023 34 views Posted By : YarlSri TV
Image

குழந்தையுடன் குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட தாய்! 

தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் குளத்தில்  குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும் அவரது ஒரு வயதுடைய மகளும் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.



உயிரிழந்த பெண், தானும் குழந்தையும் தனது கணவர் மற்றும் கணவரின் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் எழுதியுள்ளார்.



உயிரிழந்த பெண் கடிதம், திருமணச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஏரிக்கு அருகில் வைத்துவிட்டு இன்று (23) காலை தனது சிறு குழந்தையுடன் ஏரியில் குதித்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.



ஏரியில் தாயின் சடலம் மிதப்பதாகவும், குழந்தையின் சடலம் ஏரியில் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை