மாட்டினைக் களவாடியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி!
Aug 23, 2023 43 views Posted By : YarlSri TV
மாட்டினைக் களவாடியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி!
திருகோணமலை - கந்தளாய் பகுதியில் மாடு ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ்கான்ஸ்டபிள் அதிகாரி பணியில் இருந்து நேற்றைய தினம் (22.08.2023) இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ்கான்ஸ்டபிள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் கடந்த (20.08.2023) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், அவரை திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago