Skip to main content

மாட்டினைக் களவாடியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி!

Aug 23, 2023 43 views Posted By : YarlSri TV
Image

மாட்டினைக் களவாடியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி! 

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் மாடு ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.



கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ்கான்ஸ்டபிள் அதிகாரி பணியில் இருந்து நேற்றைய தினம் (22.08.2023) இடைநிறுத்தப்பட்டுள்ளார்.



குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ்கான்ஸ்டபிள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் கடந்த (20.08.2023) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.



கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், அவரை திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை