நான் ஒரு சதத்தையாவது மோசடி செய்திருந்தால் என்னை சிறைக்கு அனுப்புங்கள்! - அனுரகுமார வேண்டுகோள்.
Aug 22, 2023 31 views Posted By : YarlSri TV
நான் ஒரு சதத்தையாவது மோசடி செய்திருந்தால் என்னை சிறைக்கு அனுப்புங்கள்! - அனுரகுமார வேண்டுகோள்.
நான் ஒரு சதத்தையாவது மோசடி செய்திருந்தால் என்னை சிறையில் அடையுங்கள் என ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிலர் ஜேவிபிக்கு வெளிநாட்டில் பணம் உள்ளது என சிலர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நானோ எனது கட்சியை சேர்ந்த எவரும் பொதுமக்களின்பணத்தில்ஒரு சதத்தை கூட மோசடி செய்யவில்லை,நாங்கள் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால் எங்களால் இந்த அரசியலை செய்ய முடியாது எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஆட்சியிலிருந்தவேளை நாங்கள் மோசடியில் ஈடுபட்;டவர்கள் குறித்த விபரங்களை வெளியிட்டோம் நாங்கள் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் தற்போதைக்கு நாங்கள் சிறைகளில் இருந்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களை தண்டிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவொன்றை நியமித்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன் ஆணைக்குழு தனது விசாரணைகளை முடிக்கும் முன்னரே கோட்டாபய வீட்டிற்கு செல்லவேண்டிய நிலையேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜேவிபிக்கு எதிரான கருத்துக்கள் சேற்றை வாரியிறைத்தல் போன்றவற்றை எதிர்பார்க்கலாம் நாட்டின் தலைவிதியை ஜேவிபி மாற்றுவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago