பங்களாதேஷிற்கு முதலாவது தவணைப் பணத்தினை திருப்பி செலுத்திய இலங்கை...!
Aug 22, 2023 38 views Posted By : YarlSri TV
பங்களாதேஷிற்கு முதலாவது தவணைப் பணத்தினை திருப்பி செலுத்திய இலங்கை...!
2021 ஆம் ஆண்டு நாணய மாற்று முறையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷுக்கு இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது.
பங்களாதேஷ் வங்கியின் ஊடக பேச்சாளரும், நிர்வாக பணிப்பாளருமான மெஸ்பால் ஹக், முதலாவது தவணைப்பணம் கடந்த (17.08.2023) செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார் என தகவலறியப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணைப் பணம் எதிர்வரும் (30.08.2023) ஆம் திகதி செலுத்தப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த ஆண்டுக்குள் இலங்கை மொத்தத் தொகையினையும் செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மூன்று மாதங்களில் இரண்டு முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டது.
இறுதியாக, கடனைத் திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தில் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடன் ஒப்பந்தத்தின்படி, செலுத்த வேண்டிய வட்டியை இலங்கை முறையாக செலுத்தி வருவதாக பங்களாதேஷ் வங்கி வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
11 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
11 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
11 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
11 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
11 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
11 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago