வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; உள்ளுராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடாத்த வலியுறுத்து! ,
Aug 22, 2023 31 views Posted By : YarlSri TV
வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; உள்ளுராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடாத்த வலியுறுத்து! ,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தேர்தலை நடாத்த வேண்டும் அல்லது வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாட்டு சுற்றறிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (21.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நிதி நெருக்கடி காரணமாக வாக்கெடுப்பு பணிகளுக்கு தேவையான நிதியை விடுவிப்பது கடினம் என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. தற்போது நாட்டின் நிதி நிலைமை சீரான தன்மையில் காணப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆகவே வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடாத்த வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த நிதி விடுவிப்பதில் சிக்கல் நிலை காணப்படுமாயின் வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாட்டு சுற்றறிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இரத்து செய்ய வேண்டும். வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.ஆகவே ஒன்று தேர்தலை நடத்த வேண்டும் அல்லது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைகயை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கவுள்ளோம்.
வேட்புமனுத்தாக்கல் செய்து சுமார் நான்கு மாத காலமாக சம்பளமில்லாத விடுமுறையில் இருந்த அரச சேவையாளர்கள் தற்போது நிபந்தனைகளின் அடிப்படையில் அடிப்படை சம்பளத்துடன் அரச சேவையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளமைக்கும் வகையில் பிரதேச சபை,மாநாக சபை மற்றும் நகர சபை சட்டங்களை திருத்தம் செய்யும் வகையில் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை அமுல்படுத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை பெற்றுக்கொள்வதுடன்,மக்கள் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவுறுத்தியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மதித்து செயற்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை செயற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என்பது திட்டவட்டமாக விளங்குகிறது.
இவ்வாறான பின்னணியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை கோரியுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago