தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்! - படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.
Aug 22, 2023 44 views Posted By : YarlSri TV
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்! - படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை சேர்ந்த பாஸ்கர், செந்தில் அரசன் என்பவருக்கு சொந்தமான விசை படகு, பைபர் படகில் மீன்பிடிக்க நேற்று மதியம் சென்றனர். பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் அருள்ராஜ், செல்வமணி, தினேஷ் ஆகிய 4 மீனவர்களும் , செந்தில்அரசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் வினோத், மருது ஆகிய மூன்று மீனவர்களும் ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 பைபர் படகுகளில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி, கம்பி மற்றும் கட்டைகளுடன் மீனவர்களின் படகில் ஏறி 800 கிலோ மீன்பிடிவலை, 2 செல்போன், திசை காட்டும் கருவி, பேட்டரி, டார்ச்லைட் உள்ளிட்ட ஜந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.
இதில் பாஸ்கர் என்பவரை தலையில் கம்பியால் தாக்கியதில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருள்ராஜை கத்தியால் வெட்டியதில் கையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் அவசரம் அவசரமாக ஆற்காட்டுத்துறை கடற்கரைக்கு வந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலையில் பலத்த காயம் அடைந்த பாஸ்கருக்கு 21 தையல் போடப்பட்டுள்ளது.
அருள்ராஜ், பாஸ்கர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் செந்தில்அரசன், மருது, வினோத் ஆகிய மூன்று பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
17 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
17 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
17 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago