நடிகர் தலைவாசல் விஜய் மகள் திருமணம்.. தமிழக கிரிக்கெட் வீரர் மாப்பிள்ளை..!
Aug 21, 2023 35 views Posted By : YarlSri TV
நடிகர் தலைவாசல் விஜய் மகள் திருமணம்.. தமிழக கிரிக்கெட் வீரர் மாப்பிள்ளை..!
தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீனாவை தமிழக கிரிக்கெட் வீரர் திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது
நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா நீச்சல் போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளார். குறிப்பாக நேபாள நாட்டில் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றார். இவர் தமிழக கிரிக்கெட் வீரர் அபராஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெயவீனாவை திருமணம் செய்து கொண்ட அபராஜித், ரஞ்சித் கோப்பையில் அறிமுகம் ஆகி கிரிக்கெட் விளையாடியவர் என்பதும் இவருடைய தந்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டு நடந்த ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற அபராஜித், 2013 ஆம் ஆண்டில் துலிப் கோப்பையில் பங்கேற்று இரட்டைச் சதம் அடித்தார். மேலும் தற்போது சேப்பாக்கம் சூப்பர் கில்லி அணியின் கேப்டன் ஆகவும் உள்ளார்.
இந்த நிலையில் அபராஜித் மற்றும் ஜெயவீனா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை இவர்களது திருமண வரவேற்பும் இன்று காலை திருமணமும் நடந்தது.
சென்னை திருவான்மியூரில் நடந்த இந்த திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago