கால்வாயில் இருந்து இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு!
Aug 21, 2023 41 views Posted By : YarlSri TV
கால்வாயில் இருந்து இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு!
குருசிங்ககொடவில் சிதைந்த நிலையில் இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருசிங்ககொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வெல்லாவெளி இராணுவ முகாமில் பணிபுரியும் 35 வயதுடைய விஷான் பிரதீப் விதானச்சி என்ற இராணுவ வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்தோடு இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி வீட்டுக்கு வந்த சிப்பாய் 14ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் அதன் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தேகம நீதவான் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago