Skip to main content

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார் இந்திய வம்சாவளி மாஜி அமைச்சர் தருமன்...!

Jul 27, 2023 80 views Posted By : YarlSri TV
Image

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார் இந்திய வம்சாவளி மாஜி அமைச்சர் தருமன்...! 

சிங்கப்பூர்- இந்திய வம்சாவளியை சேர்ந்த  தருமன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார். சிங்கப்பூரில் செப்டம்பர் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. 



தற்போது அதிபராக இருக்கும் ஹரிமா யாகோப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தருமன் கடந்த மாதம் அனைத்து அரசு பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.



மேலும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தருமன் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். புதிய சகாப்தத்திற்கான அதிபராக இருக்க விரும்புகிறேன். சிங்கப்பூர் கலாச்சாரம், நமது சில விதிமுறைகள் மற்றும் நாம் ஒருவருக்கொருவர் பணிபுரியும் விதம் ஆகியவற்றை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என நான் வலுவாக உணர்கிறேன் என்றார்...


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை