இந்தியாவின் கவனத்திற்குச் சென்றது இலங்கை குரங்கு சர்ச்சை
Apr 19, 2023 63 views Posted By : YarlSri TV
இந்தியாவின் கவனத்திற்குச் சென்றது இலங்கை குரங்கு சர்ச்சை
இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக நடவடிக்கை குறித்து, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையம் இந்தியாவின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்குகள், மிருகக்காட்சி சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டாலும், அதன் நோக்கம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
இலங்கைக்கு உரித்தான குரங்குகளை சீனாவுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் மூலம், இந்தியாவினதும், இலங்கையினதும் கலாசாரத்துக்கு பாதிப்பை ஏற்படும் என அந்த நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள குரங்களுக்கும், இலங்கையில் உள்ள குரங்களுக்கும் மரபணு ரீதியான தொடர்புகள் உள்ளதுடன், கலாசார ரீதியான பிணைப்பும் உள்ளது.
எனவே, குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு, எதிர்ப்பு தெரிவிப்பதாக, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago